எரிபொருள் விநியோகக் கடிதங்கள் செல்லுபடியாகாது- அரச அதிபர்!

யாழ்.மாவட்டத் திலுள்ள பிரதேச செயலகங்களினால் இன்று புதன்கிழமைக்கு முந்தைய திகதி இடப்பட்ட எரிபொருள் விநியோகக் கடிதங்கள் எவையும் செல்லுபடி யாகாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப் பிள்ளை மகேசன் தெரிவித்தார் . நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மாவட்ட கலந்துரையாடலின் தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்

7 எரிபொருள் விநியோகத் திற்காக பிரதேச செயலகங்களினால் திகதி இடப்பட்டு வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக கடிதங்கள் செல்லுபடி அற்றதாகும் . இவ்வாறு வழங்கப்பட்டகடிதங்களை அனேகமானவர்கள் போட்டோ கொப்பி எடுத்து தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பிரதேச செயலாளர்களினால் இதுவரை வழங்கப்பட்ட கடிதங்கள் அனைத்தும் செயலிழந்தவையாக கருதப்படும் .

எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்ற கியூ ஆர் நடைமுறையின் அடுத்த கட்டம் ஆரம் பிக்கும் வரை பிரதேச செயலகங்களினால் வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரே பொறிமுறை யின் கீழ் புதிய அத்தாட்சிப்பத் திரம் வழங்கப்படும் . ஆகவே , எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் பிரதேச செயலங்களினால் இன்று புதன்கிழமை முதல் புதிய திகதியிடப்பட்ட கடிதங்களை மட்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார் .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *