வெலிக்கடை சிறைக்காவலரான பெண் அதிரடிப்படையினரால் கைது!

வெலிக்கடை சிறைச்சாலையின் காவலரான பெண்ணொருவர், பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் சோதனையிடப்பட்டும் இடத்திலேயே நேற்று (17) அவர் கைது செய்யப்பட்டதாக அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

குறித்த சோதனை இடம்பெறும் வேளையில், 52 வயதுடைய சந்தேகநபர் தம்மிடம் இருந்த மாத்திரையொன்றை, வாயில் மறைத்து வைக்க முற்பட்ட வேளையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply