திருகோணமலை மாவட்டம்- தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ பகுதியில் சிறு போக வேளாண்மை அறுவடை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுமார் 650 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட வேளாண்மை செய்கையானது
தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் பசளை கிருமி நாசினி கிடைத்தனால் அமோக விளைச்சல் ஏற்பட்டது.
இச்சிறு போகத்தில் கிருமி நாசினி பசளை கிடைக்காததனால் விளைச்சல் குறைவாகவே கிடைத்தது. என்று விவசாயிகள் தெரிவிக்கின்றன.
முன்னர் 40-50 பேக் ஒரு ஏக்கருக்கு கிடைத்தது. இப்ப பசலை கிருமிநாசினி இன்மையால் 10 -15 பேக்குகளே கிடைக்கின்றன
யூரியா பசலை இல்லாத காரணமே விளைச்சல் குறைவுக்கு காரணமாகும்
எண்ணெய் பிரச்சினை அதாவது டீசல் இல்லாத காரணமாக நெல் அறுவடை செய்வதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அடுத்த போகத்திலாவது பசளை கிரிமி நாசினிகளை தந்து உதவுமாறு வேண்டுகிறோம்.


பிற செய்திகள்