துறைத்­த­லை­வர் பத­வியை தரா­வி­டின் உயிர்­மாய்ப்­பேன் -யாழ். பல்­கலை பேரா­சி­ரி­யர் தீக்­கு­ளிக்க முயற்சி

எனக்குத் துறைத்­த­லை­வர் பத­வி­யைத் தரா­வி­டின் உயிரை மாய்ப்­பேன்’ என்று கூறிக்­கொண்டே யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்கழகப் பேரா­சி­ரி­யர் ஒரு­வர் தன்­னு­ட­லில் மண்­ணெண் ­ணெய் ஊற்றித் தீக்­கு­ளிக்க முயன்­றுள்­ளார்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் தெரி­யவ­ரு­வ­தா­வது:–

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தின் துறைத்­த­லை­வர் ஒரு­வர் ஊதி­யத்­து­டன் கூடிய ஒரு­வ­ருட விடு­முறை எடுப்­ப­தற்கு விண்­ணப்­பித்­தி­ருந்­தார். அவ­ரது விண்­ணப்­ப­மும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு விடு­முறை வழங்­கப்­பட்­ட­தால், குறித்த துறைத்­த­லை­வ­ராக – பதில் கடமை புரிய – இன்­னொரு பேரா­சி­ரி­யர் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

ஆனால், குறித்த துறைத்­த­லை­வர் மாண­வி­க­ளி­ட­மும், சக பெண் விரி­வு­ரை­யா­ளர்­க­ளி­ட­மும் பாலி­யல் லஞ்­சம் கோரி­ய­தா­லேயே பத­வி­யில் இருந்து நீக்­கப்­பட்டு, புதி­ய­வர் அந்­தப் பத­வி­யில் அமர்த்­தப்­பட்­டுள்­ளார் என்று இணை­யங்­கள் சில­வற்­றில் செய்­தி­கள் வெளி­யா­கின. இத­னை­ய­டுத்து, உட­ன­டி­யாகத் தனது விடு­மு­றை­யைப் பிற்­போட்­டு­விட்டு, பழைய துறைத்­த­லை­வர் மீண்­டும் அதே பத­வி­யில் பணி­யாற்ற விருப்­பம் வெளி­யிட்­டி­ருந்­தார்.

இந்­த­நி­லை­யில் யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்­தில் துணை­வேந்­தர் தலை­மை­யில் முக்­கி­ய­மான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று இடம்­பெற்­றுக் கொண்­டி­ருந்­தது.

அப்­போது கூட்ட மண்­ட­பத்­துக்­குள் குறித்த துறை­யின் தலை­வ­ராகப் பதில் கட­மை­க­ளைப் பொறுப்­பேற்­க­வி­ருந்த பேரா­சி­ரி­யர் உள்­நு­ழைந்­தார்.

தனக்கு வழங்­கப்­பட்ட துறைத்­த­லை­வர் பத­வி­யில் தன்­னையே நிய­மிக்கவேண்­டும் என­வும், அவ்­வா­றில்­லா­விட்­டால் உயிரை மாய்ப்­பேன் என்­றும் கூறி, யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் துணை­வேந்­தர் உள்­ளிட்ட அதி­கா­ரி­கள் குழு­வி­ன­ரின் முன்­னி­லை­யில் அவர் தனது உட­லில் மண்­ணெண்­ணெயை ஊற்றி, தீக்­கு­ளிக்க முயன்­றுள்­ளார்.

எனி­னும் துணை­வேந்­தர் உள்­ளிட்­ட­வர்­கள் விரைந்து செயற்­பட்டு பேரா­சி­ரி­ய­ரின், இந்த முயற்­சி­யைத் தடுத்து நிறுத்­தி­யுள்­ள­னர் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *