மன்­னார், பூந­கரி காற்றாலைத் திட்டங்கள் அதானி நிறுவனத்துக்கே! – ரணில் அர­சாங்­கம்

வடக்கு மாகா­ணத்­தில் பூந­கரி, மன்­னார் பகு­தி­க­ளில் 500 மில்­லி­யன் டொலர் செல­வில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வுள்ள காற்­றாலை மின்­னுற்­பத்­தித் திட்­டத்தை இந்­தி­யா­வின் அதானி நிறு­வ­னத்­துக்கு வழங்­கி­யுள்­ளது ரணில் அர­சாங்­கம்.

இந்­தத் தக­வலை மின்­சக்தி மற்­றும் எரி­சக்தி அமைச்­சர் காஞ்­சன விஜ­ய­சே­கர தனது ருவிற்­றர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்

இந்­தத் திட்­டத்­தின் மூலம் அதானி நிறு­வ­னம், மன்­னா­ரில் 286 மெகா­வாட், பூந­க­ரி­யில் 234 மெகா­வாட் திறன்­கொண்ட இரு காற்­றாலை திட்­டங்­களை நிறை­வேற்­ற­வுள்­ளது.

ஏற்­க­னவே மன்­னார் காற்­றா­லைத்­திட்­டம் அதானி குழு­மத்­துக்கு வழங்க சம்­ம­தம் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அதா­னி­யும் நேர­டி­யாக மன்­னா­ருக்கு வந்து, நிலை­மை­களை பார்­வை­யிட்­டுச் சென்­றி­ருந்­தார்.

ஆயி­னும் இந்­திய நிறு­வ­னத்­துக்கு இந்­தத் திட்­டத்தை வழங்­கக்­கூ­டாது என்று தெற்­கில் எழுந்த எதிர்ப்­பலை கார­ண­மாக, அதானி குழு­மத்­துக்கு இந்­தப் புதுப்­பிக்­கத்­தக்க மின்­சக்தி காற்­றா­லைத் திட்­டத்தை வழங்­கு­வ­தில் ராஜ­பக்ச அர­சாங்­கம் பின்­ன­டித்து வந்­தது.

இந்த நிலை­யில், அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தில் சீனக்­கப்­பல் நிறுத்­தப்­பட்­ட­மைக்கு இந்­தியா கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்ள அதே தினத்­தில் (நேற்று), இந்த ஒப்­பந்­தங்­கள் இந்­திய நிறு­வ­னத்­துக்­குக் கைமாற்­றப்­ப­டு­கின்­ற­மைக்கு தற்­கா­லிக ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்­தித் திட்­டங்­க­ளின் முன்­னேற்­றம் குறித்து விவா­திப்­ப­தற்கு இலங்கை மின்­சார சபை மற்­றும் நிலை­யான அபி­வி­ருத்தி அதி­கார சபை­யின் அதி­கா­ரி­கள் நேற்­றை­ய­தி­னம் அமைச்­ச­ரு­டன் கலந்­து­ரை­யா­ட­லில் ஈடு­பட்­ட­னர். இதன்­போதே இந்த ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டது என்று அமைச்­சர் தனது ருவிற்­ற­ரில் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *