கோழி இறைச்சிக்கு பதிலாக மாட்டிறைச்சியை விற்பனை செய்தவர் சிக்கினார்

கோழி இறைச்சி விற்பனை செய்யும் போர்வையில் அனுமதிப்பத்திரமின்றி இரகசியமான முறையில் மாட்டிறைச்சி மற்றும் மரை இறைச்சியை விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இமதுவ நகரில் பொலிஸார் இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இந்த நபர் கோழி இறைச்சியை விற்பனை செய்ய அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும் நீண்டகாலமாக மிக இரகசியமான முறையில் மாட்டிறைச்சி மற்றும் மரை இறைச்சியை விற்பனை செய்து வந்துள்ளார்.

இமதுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸ் ஒற்றர் ஒருவரை பயன்படுத்தி கடையை முற்றுகையிட்டு 34 கிலோ கிராம் மாட்டிறைச்சி மற்றும் 4.5 கிலோ கிராம் மரை இறைச்சியை கைப்பற்றியுள்ளனர்.

இந்த கோழி இறைச்சி கடைக்கு அருகில் பௌத்த விகாரை ஒன்று இருப்பதுடன் சந்தேக நபர் சூட்சுமான முறையில் மாட்டிறைச்சியை விற்பனை செய்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *