மொனராகலையில், நேற்று 63 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதுவரை மொனராகலை பொலிஸ் பிரிவில் 13 ஆயிரத்து 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இதுவரையில் 209 போ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில் நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
எனினும், தற்போது நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மொனராகலை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளா் காரியாலயம் தெரிவித்துள்ளது.






