கல்லுண்டாயில் இதுவரை ஏழு குடும்பங்கள் இடம்பெயர்வு.!

யாழில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வயல் நிலங்களும் அழிவடைந்துள்ளன.

அந்த வகையில் கல்லுண்டாய் குடியேற்றத் திட்டத்தில் வசிக்கும் ஏழு குடும்பங்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்துடன் கல்லுண்டாய் குடியேற்றத் திட்டத்தில் வசிக்கும் ஏனைய குடும்பங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அந்தப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply