நாடாளுமன்றில் எதிரணியினருடன் ஏற்பட்ட காரசாரமான விவாதத்தில், லொஹான் ரத்வத்த எதிரணியினரை நோக்கி கூச்சலிட்டதுடன் கெட்டவார்த்தையை பயன்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.
உர விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினருடன் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
அமைச்சருக்கு அருகில் அமர்ந்திருந்த லொஹான் ரத்வத்த எதிரணியினரை நோக்கி கூச்சலிட்டதுடன் கெட்டவார்த்தையை பயன்படுத்தியிருந்தார்.
இதன்போது, அருகில் இருந்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ரத்வத்தவின் தலையில் கைகளை வைத்து அவரை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
இருப்பினும், கோபத்தில் மீண்டும் மீண்டும் கடும்சொற்பிரயோகங்களை மேற்கொள்ள இராஜாங்க அமைச்சரைக் கட்டுப்படுத்த மஹிந்தானந்த அளுத்கமகே பல முயற்சிகளை மேற்கொண்டார்.
லொஹான் ரத்வத்த சிறைச்சாலையில் கைதிகளை மண்டியிடவைத்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






