ராஜாங்கனை நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் குளிப்பதற்காக சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தபுத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கால்வாயில் குளிக்கச் சென்ற பெண்ணொருவர் நீரில் மூழ்கிய பெண்ணொருவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக தபுத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தபுத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தபுத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்