
இலங்கைக்கான அத்தியாவசியமான பயணங்களை மட்டும் பரிந்துரைக்கும் தீமானத்தை பிரான்ஸ் அரசாங்கம் நேற்று ( புதன்கிழமை) தளர்த்தியுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை ஆகஸ்ட் 18, க்குப் பிறகு, மேலும் நீட்டிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, இந்த அறிவிப்பை பிரான்ஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
மேலும் பிரான்ஸ் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு இலங்கையில் பயணம் செய்யும் போது அதிக விழிப்புடன் இருக்குமாறும் பரிந்துரைத்துள்ளது.
இதேவேளை பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகங்களை நிர்வகிப்பதற்கு சிறந்த இடத்தில் இலங்கை இருப்பதோடு உள்ளூர் பயண நிறுவனங்களுடன் பயணத் திட்டங்களை முன்னோக்கிச் செல்லுமாறு பிரான்ஸ் அரசாங்கம் பயணிகளை வலியுறுத்தியுள்ளது.