விரைவில் நடாத்தப்படுகின்றது உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தல்?

உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் திகதி நிர்ணயிக்கப்படும் என தெரியவருகின்றது.

உள்ளாட்சி சபைகளின் பதவி காலம் முடிவடைந்திருந்தாலும், துறைசார் அமைச்சருக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவற்றின் பதவிகாலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்தும் அதிகாரம், ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறவுள்ளது.

Leave a Reply