மர அணில் தேசிய விலங்கு அந்தஸ்திலிருந்து நீக்கப்பட வேண்டுமா இல்லையா? ஆராய தனி குழு

மர அணில் தேசிய விலங்கு அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட வேண்டுமா இல்லையா? என்பதை தீர்மானிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய குழுவின் தீர்மானம் பின்பற்றப்படும் எனவும், மர அணிலை தேசிய விலங்கு அந்தஸ்தில் இருந்து நீக்குவது தொடர்பில் தன்னிச்சையான தீர்மானங்களை ஒருபோதும் எடுக்கப்போவதில்லை எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு பயிர் சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளின் பட்டியலில் மர அணிலை உள்ளடக்குவதற்கு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், இலங்கையின் தேசிய விலங்காக மர அணில் பெயரிடப்பட்டுள்ளதன் காரணமாக சிக்கல் நிலை ஏற்பட்டது என தெரிவிக்கப்படுகிறது .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *