தாய்வான் விவகாரத்தில் நான்சி பெலோசி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.
இரு பலம்பொருந்திய அயல்நாடுகளின் நலன்களிற்கு இடையில் சமநிலை காண்பது தற்போது மிகவும் கடினமானதாக மாறியுள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பசுபிக்கில் தென்சீன கடலில் காணப்படும் நிலை இந்து சமுத்திரத்தில் இந்து சமுத்தி;ரத்திற்குள் நுழைந்துவிடுமோ என்பது குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில்,சர்வதேச ஊடகமொன்றிற்கான மிக நீண்டபேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கேள்வி – இரு பலம் பொருந்திய அயல்நாடுகளின் போட்டி நலன்களிற்கு மத்தியில் எவ்வாறு சமநிலை காண்கின்றீர்கள்?
பதில் – இரு பலம்பொருந்திய அயல்நாடுகளின் நலன்களிற்கு இடையில் சமநிலை காண்பது தற்போது மிகவும் கடினமானதாக மாறியுள்ளது.
குறிப்பாக உக்ரைன் மற்றும் சீனா ரஸ்யாவிற்கு இடையிலான உடன்படிக்கையின் பின்னர். ஐரோப்பிய தரப்பில் உருவாகிவரும் அழுத்தங்களை உங்களால் பார்க்க முடியும்.
மேலும் இந்த மோதல் இந்து சமுத்திரத்திற்குள் நுழைந்துவிடுமோ என குறிப்பாக கவலையடைந்துள்ளேன். இதுவரை நாங்கள் அதிகாரபோட்டியை இந்துசமுத்திரத்தில் தவிர்த்து வந்துள்ளோம்.
ஆனால் அந்த நிலைiமையை நாங்கள் தற்போது எதிர்கொள்ளவேண்டும் அனைவருடனும் இணைந்து செயற்படவேண்டும் என நான் கருதுகின்றேன்.
இலங்கையை பொறுத்தவரை இந்தியாவுடன் விசேடமான உறவை கொண்டுள்ளது நாங்கள் பரஸ்பரம் ஏனையவர்களின் நலன்களை கருத்தில்கொள்ளவேண்டும்.
ஆனால், பல நாடுகள் இந்த அதிகார மோதலில் இருந்து விலகியிருக்க விரும்புகின்றன ஆகவே நாங்கள் இது குறித்தும் எங்கள் கொள்கை என்னவென்பது குறித்தும் தெளிவாகயிருக்கவேண்டும் .
கேள்வி – ஆகவே நாங்கள் தற்போது தென்சீனாவில் பசுபிக்கில் காணக்கூடியதாக உள்ள நிலை அடுத்து இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் என கருதுகின்றீர்களா?
பதில் – அது இடம்பெறுவதை விரும்பவில்லை.
தாய்வான் விவகாரத்தில் நான்சி பெலோசி தானாகவே நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா அரசாங்கம் இது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளது என நான் கருதவில்லை.ஆனால் அவர்கள் அவருக்கு ஆதரவளிக்கவேண்டிய நிலையில் உள்ளனர். அதுபோன்ற ஒரு சூழ்நிலை இங்கு இடம்பெறுவதை நாங்கள் விரும்பவில்லை.
இந்த பகுதிக்கான பாதுகாப்பை வழங்குபவராக இந்தியாவை நாங்கள் பார்க்கின்றோம்,மோதல் அதிகரிப்பதும் இரு நாடுகளிற்கு இடையிலான போட்டி அதிகரிப்பதும் இடம்பெறாதவரை எந்தநாடும் இந்து சமுத்திரத்தில் செயற்படலாம்.
பிற செய்திகள்