<!–
பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தனவின் வீட்டுக்குள் நுழைந்து சேதம் விளைவித்து அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 25 வயதுடைய இளைஞனை கம்பஹா நல்லா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது சகோதரரின் வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்த சந்தேகநபர் நேற்று (புதன்கிழமை) லொலுவாகொடவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
மேலும் குறித்த சந்தேகநபர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.