பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தனவின் வீட்டுக்குள் நுழைந்த சந்தேகநபர் கைது

<!–

பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தனவின் வீட்டுக்குள் நுழைந்த சந்தேகநபர் கைது – Athavan News

பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தனவின் வீட்டுக்குள் நுழைந்து சேதம் விளைவித்து அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 25 வயதுடைய இளைஞனை கம்பஹா நல்லா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது சகோதரரின் வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்த சந்தேகநபர் நேற்று (புதன்கிழமை) லொலுவாகொடவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .

மேலும் குறித்த சந்தேகநபர் அத்தனகல்ல நீதவான்  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *