கால்நடை தீவனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

கால்நடை தீவனத்திற்காக சோளம் மற்றும் சோயாவை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரி அமைச்சரவையில் பிரேரணையை சமர்ப்பிக்க விவசாய அமைச்சர் தயாராகி வருகிறது.

தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை கருத்திற் கொண்டு கால்நடை தீவன உற்பத்திக்கு தேவையான சோயா மற்றும் சோளத்தை கொள்வனவு செய்வதில் சந்தையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கால்நடை தீவன பற்றாக்குறையால் கோழி வளர்ப்பு மற்றும் முட்டை, பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதோடு மக்களின் போசாக்கு நிலையை மேம்படுத்த தேவையான கால்நடை உற்பத்தித் திறனும் குறைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *