
இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தளர்வான விசா விதிமுறைகள் மேலும் கொரிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்க்க உதவும் என இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்தனவை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே தென்கொரியத் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் இதனைக் கூறியுள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவை, அலரி மாளிகையில் வைத்து தென்கொரியத் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.