இனப்படுகொலை பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக்கொள்ள மேலும் கால அவகாசம் கோரும் இலங்கை அரசு!

இம்முறை நடைமுறைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை அமர்வில்,இனப் படுகொலை தொடர்பான பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மேலும் சில வருடங்கள் கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் கோரவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவா அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.இது இலங்கைக்கு மிக முக்கியமான அமர்வு.இலங்கை தொடர்பான 46.1 ஒன்றின் கால அவகாசம் நிறைவுக்கு வருகிறது.ஆகவே புதிய தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலையில் ஜெனிவா உள்ளது.

கடந்த ராஜ பக்ச அரசு காலத்தை இழுத்தடித்து ஏமாற்றியது. தற்போது உள்ள அரசு மேலும் கால அவகாசத்தை கோருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.இந்த நேரத்தில் தான் பேச்சு வார்த்தை என்ற பெயரில் தமிழ் கட்சிகளை அழைப்பதும்,சர்வ கட்சி என்ற பெயரில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதுமான வேலைகளில் அரசு ஈடுபடும்.

இது தவிர தற்போது உள்ள பொருளாதார பிரச்சினைகளை காரணம் காட்டி,அனுதாபத்துடன் மேலும் 2 வருடங்கள் கால அவகாசத்தை கோரும் நிலையில் அரசு செயற்பட்டு வருகிறது என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *