மரபுரிமைச் சின்னங்களை பாதுகாப்பது அனைத்து தரப்பினரின் பணி-புஸ்பரட்ணம் கருத்து!

மரபுரிமைச் சின்னங்களை பாதுகாப்பதற்காக இந்த இயக்கத்தினை சட்ட ரீதியாக செய்வதற்கு பதிவு செய்திருக்கின்றோம்.

இந்த அமைப்பிற்கு நிதி பெறுவதற்கு அரசினுடைய அனுமதி பெறுவதற்கு முயற்சி எடுத்திருக்கின்றோம் என யாழ்.தமிழர் மரவுரிமை இயக்கத்தின் தலைவர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மரபுரிமைச் சின்னங்களை மீள் உருவாக்கம் செய்து பாதுகாத்து எதிர்கால சந்ததியினர் இது தான் எங்களுடைய அடையாளம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நாங்கள் பணிகளை செய்கின்ற போது மக்களும் மனமுணர்ந்து நியாயமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

ஆன்மீகம் மற்றும் அது சார்ந்த பண்பாடு என்பது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும்.ஆகவே ஆன்மீகத்திற்குரிய ஆலயத்தினை மீள் உருவாக்கம் செய்து அதனை பாதுகாப்பதிலே மக்கள் கொண்டிருக்கின்ற ஈடுபாடு அந்த ஆலயத்துடன் இணைந்த பண்பாடுகளையும் மீள் உருவாக்கம் செய்து பாதுகாப்பதற்கு மக்கள் இடையே விழிப்புணர்வினை கொண்டு சேர்ப்பதும் எங்களது கடைமையாக இருக்கின்றது.

இதற்கான சில விழிப்புணர்வு பட்டறைகளை தொல்லியல் திணைக்களத்து நிர்வாகத்தின் கீழ் பாடசாலைகள் ,பொது நிர்வாக மையங்கள் இந்த முயற்சிகளை செய்திருக்கின்றோம்.

இது ஓரளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும் மேலும் அந்த மக்களிடையே எங்களுடைய மறப்புரிமைச் சின்னங்கள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் அதனை பாதுகாப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?என்பவற்றை மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்ற போது எங்களது முயற்சிக்கு பலன் கிடைக்கும் என்பது எனது கருத்தாகும்.

மரபுரிமைச் சின்னங்களை பாதுகாப்பது என்பது அனைத்து தரப்பினருடைய பணி . ஆகவே இந்த முயற்சிக்கு பொது மக்கள் மற்றும் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் இருக்கின்ற எங்களுடைய உறவுகளின் ஆதரவும் ,ஒத்துழைப்பும் மிக மிக அவசியமான ஒன்று.

அரச அனுமதியடன் ,எங்களுடைய வெளிநாட்டு உறவுகளிடமிருந்து நிதியைப் பெறுகின்ற அதேநேரம் இங்கிருக்கின்ற தனவந்தர்கள் இவ்வாறான பணிகளுக்கு முன் வர வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக இருக்கின்றது.

எவ்வாறு தனவந்தர்களை அணுகி இந்த உதவிகளைப் பெறுவதற்கு சில வழிமுறைகளை சிந்தித்திருக்கின்றோம்.உதவி செய்யக்கூடிய நிலையில் இருப்பவர்களிடம் எங்களது தேவைகளையும் ,மரபுரிமைச் சின்னங்களை பாதுகாப்பதன் அவசியத்தையும் கூற இருக்கின்றோம்.என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *