
ஐ.நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்றையதினம்(19) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
இந்நிலையில் யாழிற்கான விஜயத்தில் இன்று காலை யாழ் மாவட்ட அரச அதிபருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து யாழ் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
குறித்த சந்திப்பில் வடக்கில் உள்ள மக்களுக்கு அபிவிருத்தி சமமானதாகவும் உணரப்பட்டதாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் குறிப்பிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்லிணக்கத்திற்கான மிகவும் அர்த்தமுள்ள நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தனர் எனவும் ஐ.நா குழுவினர் குறிப்பிட்டனர்.
இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார் (David Mclachlan-Karr), ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹெனா சிங்கர் (Hanaa Singer) மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பிரதானி ஆண்ட்ரியாஸ் கர்பாதி (Andreas Karpati) ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிற செய்திகள்