கோழி முட்டை விலை உயர்வுக்கு காரணம் வெளியாகியது

கொழும்பு, ஓக 19

கோழி மற்றும் முட்டை சார்ந்த தொழிற்துறைக் குறித்து ஆரம்பத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை கருத்தில் கொண்டு செயற்பட்டிருந்தால், தற்போதைய சிக்கல் நிலைமை ஏற்பட்டிருக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அகில இலங்கை கோழி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இந்த விடயத்தை ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது கோழி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை பாரிய அளவில் அதிகரிப்பது குறித்து தமது சங்கம் கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோழி தீவண பற்றாக்குறை காரணமாக கோழி மற்றும் முட்டை உற்பத்தி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *