
கொழும்பு, ஓக 19
திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ் பிராந்திய நிலையத்திற்கான புதிய கட்டிடத் தொகுதியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.
குறித்த நிகவு இன்று முற்பகல் நடைபெற்றது.
முன்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இன்று யாழ் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த நிலையில், அங்கு அமைந்துள்ள ஞான வைரவர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து யாழ். இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள smart class room இன் மாதிரி செயற்பாடுகளை, கல்லூரியின் பழைய மாணவனும் அமெரிக்காவின் பிரபல விஞ்ஞானியுமான பேராசிரியர் சிவானந்தன், கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு விளங்கப்படுத்தினர்.





