“இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைய வேண்டும் என்றால், அதற்கு பல காரணங்கள் உள்ளன, இலங்கை மட்டும் அவசியம் இல்லை” என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளது
இந்த ஆண்டு மட்டும் இந்தியா இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கியுள்ளது, இதில் கடன்கள் மற்றும் இடமாற்று ஏற்பாடுகள் உள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவும் சீனாவும் கைகோர்ப்பது இந்தியா மற்றும் சீனாவின் சொந்த நலனில் உள்ளது. 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை, முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பிணை எடுப்புப் பொதிக்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
“இந்நிலையில், நாங்கள் இயற்கையாகவே இலங்கைக்கு உதவி செய்வோம்,” எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்