காதலியை வேவு பார்க்க பர்தாவுடன் சென்றவர் கைது

காதலியை உளவு பார்க்க பெண் வேடத்தில் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி மகுலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதாகியுள்ளார். இவர் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை அணிந்து சென்றவேளை காலி புகையிரத நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்து காலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று காலை மாறுவேடத்தில் புகையிரத நிலையத்துக்கு வந்த குறித்த இளைஞன் கொழும்பு செல்வதற்கான பயணச்சீட்டை வாங்கியுள்ளார்.

அவரின் குரலில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விசாரித்தனர்.

பெண் உடை அணிந்திருந்த அவர் ஒரு ஆண் என அடையாளம் கண்டு கொண்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸாரின் விசாரணைகளின் போது தனது காதலிக்கு வேறு ஒரு இளைஞனுடன் தொடர்புடன் உள்ளாரா என்பதை வேவு பார்க்கவே இவ்வாறு பெண் வேடமணிந்து வந்தேன் என குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞர் காலி மகுலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *