
குரங்கு அம்மை நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு கொடுக்கப்பட்ட நோய்த்தடுப்பு தடுப்பூசி 100 சதவீதம் வெற்றியடையவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரோஸ்மண்ட் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
குரங்கு அம்மை நோய் சின்னம்மை மற்றும் பெரியம்மை ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு இடைநிலை வைரஸ் ஆகும்.
அதற்கென பெரியம்மை மற்றும் சிக்கன் குனியாவுக்கு உருவாக்கப்பட்ட நோய்த்தடுப்பு தடுப்பூசி குரங்கு அம்மைக்கு போடப்படுகிறது.
இந்த நிலையில் குரங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக பல நாடுகள் இந்தத் தடுப்பூசியை வழங்குகின்றன. எனினும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கொடுக்கப்படும் தடுப்பூசிகள் 100 சதவீதம் வெற்றியடையவில்லை.
இதுவரை உலகம் முழுவதும் 92 நாடுகளில் 35,000 பேர் இந்தத் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
இறப்புகள் 12 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், ‘கிரே ஹவுண்ட்’ வகையைச் சேர்ந்த நாய்க்கு, குரங்கு அம்மை வைரஸ் தாக்கியதால், அதை கண்காணித்து வருவதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் குரங்கு அம்மை வைரஸ் மனிதனிடமிருந்து விலங்குகளுக்கு பரவுவது இதுவே முதல் முறை.
மனிதர்களிடம் இருந்து செல்லப்பிராணிகளைத் தாக்கும் வைரஸ் மீண்டும் செல்லப்பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றினால், அது பயங்கரமான பிறழ்வு வடிவத்தை எடுக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.