
மட்டக்களப்பு வாகநேரி நீர்பாசன திணைக்களத்தின் கீழ் இம்முறை இடைப்போக விவசாய செய்கையில் ஈடுபடும் முருக்கன் தீவு விவசாய கண்டத்திற்கான உர மானிய விநியோகம் செய்யும் நிகழ்வு வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தில் வைபவ ரீதியாக நடைபெற்றது.
கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் கோ.ஜெயகாந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு,கமநல திணைக்கள மாவட்ட உதவி ஆணையாளர் கே.ஜெகநாத்,பிரதேச நீர்பாச பொறியியலாளர் ஏ.விஷ்ணுரூபன்,வாகநேரி திட்ட முகாமையாளர் எம்.தீபகாந் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அதிதிகளாக கலந்து கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தனர்.
இம்முறை சுமார் 560 ஏக்கர் நிலப்பரப்பில் இடைப்போக வேளான்மை செய்கையானது மேற்படி கண்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அவர்களுக்கான உரமானது ஒரு ஏக்கருக்கு 40 கிலோ என்கின்ற அளவு அடிப்படையில் 10ஆயிரம் ரூபா பணப்பெறுமதியில 50 கிலோ ஏடைகொண்ட உர மூடைகள் வழங்கப்பட்டன.கடந்த போக செய்கையின்போது இரசாயனப் பசளையின்றி தங்களது விவசாயத்தினை மேற்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.அத்துடன் கறுப்பு சந்தையில் ஒரு மூடையானது 42 ஆயிரம் ரூபா முதல் 48 ஆயிரம் ரூபா வரை பணம் செலுத்தி வேளான்மை செய்திருந்தனர்.
இவர்களது இவ்வாறான நிலமை கண்டு விவசாயிகளின் நலன் கருதி உர மானிய விநியோக நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதேவேளை கமநலசேவைகள் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சிறுதாணியங்களின் அறுவடையும் இடம்பெற்றது.
பிற செய்திகள்