கோட்டாபய ராஜபக்ச சிறந்த நிர்வாகி – முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச

நான் அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பேன் பொருத்தமான தருணத்திலேயே ஓய்வு பெறுவேன் அதுவரை நான் போகமாட்டேன் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆங்கில பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்

மேலும் கோட்டாபய  ராஜபக்ச தொடர்பில் கருத்து தெரிக்கு பொழுது நான் போகலாமா என கேட்டிருந்தால் வேண்டாம் என்றே சொல்லியிருப்பேன் எனவும் முன்னாள் பிரதமர்மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொதுஜனபெரமுனவின் தலைவராக தொடர்ந்தும் நீடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் அதனை கட்சியே தீர்மானிக்ககும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டாலும் நான் ஒரு சட்டத்தரணி என்னால் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணிபுரிய முடியும் அதனை செய்ய தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்  கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக காணப்பட்டவேளை அவர் சிறந்த நிர்வாக திறனை வெளிப்படுத்தியுள்ளார் என்பதோடு ஜனாதிபதியாக அவர் கடும் அழுத்தங்களை சந்தித்தார் முன்னர் கடும்போக்குவாதியாக காணப்பட்டார் அவர தற்போது மென்மையானவராக மாறிவிட்டார் எனவும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *