உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவிட்டது!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் எதிர்காலத்தில் தமது ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் செப்டம்பர் 20ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *