பிரமாண்டமாக இடம்பெற்ற மன்னார் பிறீமியர் லீக் இறுதி போட்டி!

மன்னார் மாவட்டத்தில் உள்ள கால்பந்தாட்ட வீரர்களின் திறமையை வெளிக்கொணரும் முகமாக மன்னார் உதைபந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள கால்பந்தாட்ட கழகங்களை உள்ளடக்கி பத்து அணிகளின் பங்குபறுதலுடன் இடம் பெற்ற மன்னார் பிறீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நானாட்டன் பிரதேச சபை மைதானத்தில் இடம் பெற்றது.

கடந்த 2020 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மன்னார் பிறீமியர் லீக் சுற்றுபோட்டி கொரோனா பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி கரணமாக இடம் பெறாமல் இருந்த நிலையில் கடந்த மாதம் மீண்டு ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்றது.

இந்த நிலையில் மன்னார் MARTYRS அணி மற்றும் ISLAND FC அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகிய நிலையில் இரு அணிகளுக்குமான இறுதி போட்டி இடம் பெற்றது

விறு விறுப்பாக இடம் பெற்ற குறித்த போட்டியில் இரு அணியினரும் தலா ஒரு கோல் வீதம் பெற்றிருந்த நிலையில் தண்ட உதை மூலாமக வெற்றி வாய்ப்பு வழங்கப்பட்டது.

தண்ட உதையில் அதிக கோல்களை பெற்று MARTYRS அணி வெற்றி பெற்று 1000000 ரூபா பணப்பரிசு மற்றும் வெற்றி கிண்ணத்தை சுவீகரித்தது.

குறித்த போட்டிக்கு விருந்தினர்களாக வருகை தந்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய சிரேஸ்ர உபதலைவரும் முன்னால் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவருமான ரஞ்சித் ரொட்றி கோ மற்றும் முன்னால் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் அனுரடி சில்வா மற்றும் மன்னார் உதைபந்தாட்ட ஜாம்பவான் அருட்சகோதரர் ஸ்ரணிஸ்லாஸ் மன்னார் உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் ஞானபிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் இணைந்து வெற்றி கிண்ணங்கள் மற்று பதக்கங்களை வழங்கி வைத்தனர்.

குறித்த சுற்று போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற ISLAND FC அணிக்கு ஐந்து லட்சம் ரூபாவும் மூன்றாம் இடத்தை பள்ளிமுனைFC அணிக்கும் மூன்று இலட்சம் ரூபாவும் பதங்கங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அதே நேரம் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இவ்வருடம் தேசிய அணிக்கு தெரிவாகிய வீரர் மற்றும் மன்னார் உதைபந்தாட்ட ஜாமப்வான் அருட்சகோதர் ஸ்ரனிஸ்லாஸ் அவர்களும் கெளரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *