மன்னார் மாவட்ட மீனவர்கள் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு!

தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடல் பகுதியில் வீசி வரும் அதீத காற்று காரணமாக மூன்றாவது நாளாக அதிகளவான மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்து வருகின்றனர்.

மன்னார் தீவக பகுதிகளை சூழ்ந்த கடல் பரப்பின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்ற மையினாலும் கடல் பகுதியில் அதீத காற்று வீசுவதனாலும் மீன்பிடி நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் உள்ளூர் மீனவர்களுடைய படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் அடையவிடப்பட்டுள்ளமையும் காணக்கூடியதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *