திருமலையில் திருட்டுத் தனமாக விற்கப்பட்ட காணி..! சந்தேக நபர் கைது

திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில், காணியொன்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில், திருட்டுத் தனமாக காணியொன்றுக்கு போலி ஆவணங்களை சரிசெய்து விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று(12) உத்தரவிட்டார்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் திருகோணமலை பகுதியில் உள்ள காணியொன்றுக்கு போலியான முறையில் காணி உறுதிப்பத்திரங்களை தயார் செய்து விற்பனை செய்துள்ளதாகவும்,அந்த காணியின் உரிமையாளர் வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.

அத்தோடு சந்தேக நபர்களை வெளிநாடு அனுப்புவதாக கூறி பணம் பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சந்தேக நபரை ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *