வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது ஓய்வு கேட்ட நிதியமைச்சர்!

வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஆரம்பித்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சிறிது நேரம் ஓய்வு கோரியதன் காரணமாக நாடாளுமன்றத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

மதியம் 2 மணியளவில் வரவு செலவுத்திட்டத்தை வாசிக்க ஆரம்பித்த அமைச்சர் பசில் ராஜபக்ச, ஆசனத்தில் அமர்ந்துகொண்டு வாசிக்க சபாநாயகரிடம் அனுமதி கோரினார்.

இதன் பின்னர், ஆசனத்தில் அமர்ந்தவாறு வரவு செலவுத்திட்டத்தை வாசித்த பசில், அதன் பின்னர் தனக்கு சற்று ஓய்வு வேண்டும் என கூறியதும் சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வீதிக்கு இறங்கிய ஐக்கிய தேசியக் கட்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *