வடமாகாணத்தில் முதியோரை பேண விசேட வேலைத்திட்டம் – வடமகாண ஆளுநர் முன்னெடுப்பு

வடக்கு மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை பேண விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வடக்கு மகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் வயதான முதியவர்கள் உடல் உள ரீதியில் பல்வேறு சவால்களை எதிர் கொள்கின்றனர்.

அத்துடன் ஆரோக்கியம் குன்றுதல், மன நலம் பாதிப்பு பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் முதியவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக வயது முதிர்ந்தோரின் அவர்களால் தமது அன்றாட கடமைகளைச் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அத்துடன் குடும்ப சமூகப் பாதிப்பு மனஉளைச்சல் போன்றனவும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய உடல் சாராச் சவால்களாகும்.

இந்த நிலையில் வடமாகாணத்தில் முதியோரின் தேவைகளைக் கணிப்பிடுவதற்கான முன்னோடி ஆய்வு இதுவரை முறையாக அடையாளப்படுத்தப்படாத நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை அடையாளப்படுத்தும் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட வுளது.

வடமாகாண சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை மாற்றும் வடமாகாண சமூகசேவைத் திணைக்களம் என்பன இணைந்தவழி நடத்தலின் கீழ் இந்தச் செயற்றிட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த ஆய்வானது முதியோர் வாழும் சமூகத்தில் அவர்களது சுகாதார சமூகத் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை எவ்வகையிற் தீர்க்க முடியும் என்ற வழிவகைகளை ஆராய்வதாகும்.

அத்துடன் முதியோரின் உடல் உள ஆரோக்கிய நிலைமை தொடர்பிலும் தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *