
இரண்டு மாதக் கைக்குழந்தை உள்ளிட்ட 8 பேர் இலங்கையில் இருந்து ஏதிலிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.
குறித்த, எட்டு பேரும் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக மூன்றாம் மணல் திட்டு பகுதியில் படகு செலுத்துனர்களினால் இறக்கிவிடப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் தமிழக கடலோர காவல்துறையினரால் 2 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 8 பேர் இன்று அதிகாலை மீட்கப்பட்டனர்.
மேலும், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் மண்டபம் ஏதிலிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு ஏதிலிகளாக சென்றடைந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்