2025 ஆம் ஆண்டு வரை நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்கு 4.5 மெட்ரிக் தொன் நிலக்கரியை வழங்குவதற்கான ஏலங்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குழு, ரஷ்ய நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரத்தை வழங்க பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி 900 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், நிறுவனம் 2025 வரை மின்சார உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரியை வழங்கும்.
குறித்த ரஷ்ய நிறுவனம், ஒரு மெட்ரிக் தொன் ஒன்று 328.22 டொலர் என்ற அளவில் நிலக்கரியை ஆறு மாதக்கடன் வசதியில் வழங்க முன்வந்துள்ளது.
ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட கேள்விப்பத்திர பரிந்துரைக்குழு அதன் பரிந்துரையை அடுத்த வாரம் நிதி அமைச்சகத்திடம் அதன் அவதானிப்புகளுக்காக சமர்ப்பிக்கவுள்ளது.
இதனையடுத்து கொள்முதல் குழுவின் ஒப்புதலுக்காக ஆகஸ்ட் 29 ஆம் திகதி அமைச்சரவைக்கு அது அனுப்பப்படவுள்ளது.
இந்தநிலையில் ரஷ்ய நிறுவனத்தின் இந்த ஆறு மாத கடன் வசதியை ஒரு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது. இல்லையெனில், அடுத்த ஜனவரி மாதம் முதல் மார்ச் வரை எட்டு மணி நேரம் வரை மின்வெட்டை நாடு எதிர்கொள்ள வேண்டியேற்பட்டிருக்கும்.
லக்விஜய அனல்மின் நிலையத்தில் தற்போது நிலக்கரி இருப்பு அக்டோபர் இரண்டாம் வாரம் வரை மாத்திரமே உள்ளது.
செப்டெம்பர் 1 மற்றும் 5 ஆம் திகதிகளிலேயே நிலக்கரி ஏற்றிச்செல்லும் இரண்டு கப்பல்கள் புத்தளத்துக்கு வரவுள்ளன, அதுவும் இரண்டு வாரங்களுக்கு இவை போதுமானதாக இருக்கும் என்று இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்