முச்சக்கர வண்டிகள் உட்பட அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவைகளையும் ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
கட்டண நிர்ணயம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
பிற செய்திகள்