
மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையால் அடுக்குமாடி குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பிரதித் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்கான QR முறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் நாளாந்த வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டை மீட்டெடுக்க தமிழ்த் தலைவர்களும் கைகோர்க்க வேண்டும்! – ரணில் அழைப்பு