நாட்டில் பஞ்சம்: வடக்கிலிருந்து 8 பேர் தமிழகத்தில் தஞ்சம்

மூன்று சிறுவர்கள் உட்பட 8 பேர் இன்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த எழு பேரும், மன்னாரை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

மன்னாரிலிருந்து படகு மூலம் இன்று அதிகாலை புறப்பட்டு தனுஷ்கோடி பாலம் அருகே வந்திறங்கிய அவர்களை மண்டபம் பொலிஸார் மீட்பு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால் தாம் தமிழகத்தில் தஞ்சமடைய வந்திருப்பதாக அவர்கள் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.

8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 149 இலங்கையர் தமிழகத்துக்கு ஏதிலிகளாக புலம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *