அரசியல் கைதிகளின் உறவுகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

இன்றைய தினம் 22.08.2022 ( திங்கட்கிழமை) அரசியல் கைதிகள் விடுதலைக்கான அமைப்பு, ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இந்நிலையில்,அரசியல் கைதிகளின் உறவுகள், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நீண்ட நாளாக அரசியல் கைதிகளின் வரிசையில் எனது சகோதரன் விக்னேஸ்வரநாதன் பார்தீபன் முதல் இடத்தில் இருக்கின்றார்.அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது குடும்பம் நினைத்து கொண்டு இருக்கின்ற வேளையில் அது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது.

இந்நிலையில்,இவர் 26 வருடங்களாக ஜெயிலில் இருந்து துன்பங்களை அனுபவித்து கொண்டு இருக்கின்றார். இனி வரும் காலங்களில் என்றாலும் இவரை விடுதலை செய்து எமது குடும்பத்துடன் சேர்த்து விட வேண்டும்.

ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்டு கொள்வது என்னவென்றால் இனி வரும் பட்டியலில் என்றாலும் எமது சகோதரனை முதல் நிலையில் இட்டு வெளியில் எடுத்து தர வேண்டும்.

எமது பெற்றோர்கள் எப்போது எங்களுடன் இல்லை.இனி வரும் காலங்களின் அவர் எமது குடும்பத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்.

அவர்கள் எவ்வளவு காலமும் அனுபவித்த துன்பங்கள் போதும்.அவர்களுக்கு ஒரு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கேட்டு கொள்கின்றோம்- என்று கூறினார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *