வவுனியாவிலுள்ள ஆலயம் ஒன்றில் நேற்று ஒரு மில்லியன் (10லட்சம்) ரூபாவுக்கு மூன்று மாம்பழங்களும் ஒரு மாலைலயும் ஏலம் போன நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வவுனியா, கணேசபுரத்திலுள்ள ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று இறைவனுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பங்களும் ஒரு மாலையுமே இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டது.
இதன்போது கடும் போட்டிக்கு மத்தியில் சபரிராஜன் என்ற மாணவன் அவற்றை ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் எடுத்துள்ளார்.
கிராமப்புற ஆலயம் ஒன்றில் இவ்வாறு பெரிய தொகைக்கு மாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த ஏலத்தொகை ஆலயத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.