தற்பொழுது யாழ் மாவட்டத்திலே உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் வீட்டு தோட்ட செய்கையானது ஊக்குவிக்கப்படுகின்றது. வீட்டுதோட்ட செய்கையானது சாதாரண பொது மக்களில் இருந்து அலுவலர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஊடாக ஊக்குவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வீட்டுத்தோட்ட செய்கைக்கு தேவையான விதைகள் மற்றும் மரக்கறி நாற்றுக்களை எங்களது மாவட்ட விவசாய பயிற்சி முகாம்களில் காணப்படுகின்ற நாற்று மேடைகளின் ஊடாகவும், யாழ் மாவட்ட விதை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் நிறுவனத்தின் ஊடாக மரக்கறி விதைகளும், மற்றும் எமது அச்சுவேலி பிரதேசத்தில் காணப்படுகின்ற பூங்கணிகளும் காணப்படுகின்றன.
கரு முழ வள நிலையம் என்கின்ற தாவரங்களை பாதுகாக்கின்ற நிலையம் ஒன்று காணப்படுகின்றது. அந்த நிலையத்தின் ஊடாக மரக்கறி நாற்றுகள் மற்றும் பழ நாற்றுகள் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.
இந்த விற்பனைக்கு ஊடாக வீட்டு தோட்ட செய்கையானது ஊக்குவிக்கப்படுகின்றது.
வீட்டு தோட்ட செய்கையை நாங்கள் ஊக்குவிப்பதற்கான நோக்கம் எங்களது மரக்கறி நுகர்வையும் பழ நுகர்வையும் மக்களிடம் அதிகரிப்பதற்கும் பழங்கள் மற்றும் மரக்கறி பயிர்களின் நுகர்வின் ஊடாக போஷாக்கானது உறுதிப்படுத்தப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்