முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்பி வருவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கோட்டாவை தொடர்பு கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் போது,விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்சவை தொடர்புக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்காக வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு பசில் ராஜபக்ச, ஜனாதிபதியிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகிய போதிலும் அவர் அதனை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்