முன்னால் எம்.பி வீட்டில் திருடிய 5 பேர் சிக்கினர்

முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான நூர்தீன் மசூரின் வீட்டை உடைத்து திருடிய 5 சந்தேக நபர்கள் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் நாகவில்லு பகுதியில் உள்ள குறித்த வீட்டை, கடந்த 2ம் திகதி உடைத்து 160 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்கம், பணம் மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்த 5 பேர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கொள்ளையடித்த சந்தேக நபர்களிடமிரிந்து அரைவாசி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 2 பேர் தொடர்பு பட்டிருப்பதாகவும், குறித்த 2 பேரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *