
கொழும்பு,ஓக 22
பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்கும் உரிமையை உறுதிப்படுத்துமாறு இந் நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்க தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.