
கொழும்பு,ஓக 22
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான Dushmantha Chameera வெளியேறியுள்ளார்.
பயிற்சியின் போது இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக துஷ்மந்த சமீர இவ்வாறு வெளியேறியுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ண தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் 20 பேர் கொண்ட இலங்கை குழாமில் Dushmantha Chameera இணைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு Dushmantha Chameera வெளியேறியதை தொடர்ந்து Nuwan Thushara அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
முன்னதாக காயம் காரணமாக இலங்கை குழாமிலிருந்து Kasun Rajitha மற்றும் Binura Fernando ஆகியோர் வெளியேறிருந்தமை குறிப்பிடத்தக்கது.