ரணில் அரசுக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் – செல்வம் எம்.பி தெரிவிப்பு

எங்களது கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாதுவிடின் நாம் ஒருபோதும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு தரமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஏற்கனவே நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றோம். தொடர்ச்சியாக பயமுறுத்தலும் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை வைத்துகொண்டு பல இளைஞர்களை கைது செய்வதும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.

எங்களை பொறுத்தமட்டில் ஜனாதிபதிக்கும் கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றோம். பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

தொடர்ச்சியாக தமிழர் தரப்பிலே கைது செய்யப்படுகின்ற நிலைமைகளும் கூடுதலாகவே காணப்படுகின்றது. இந்த விடயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாட்டை ஜனாதிபதி செய்ய வேண்டும்.

இல்லையென்றால், எங்களுடைய ஆதரவு இந்த அரசாங்கத்துக்கு ஒருபோதும் இருக்காது என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *