16 வயது மகளுக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்!

மினுவங்கொட பிரதேசத்தில் மதியநேர உணவை, சரியான நேரத்துக்கு தரவில்லை எனக் கூறி 16 வயது மகளின் தலையை பிடித்து சுவற்றில் அடித்த தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைதான தந்தையை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மினுவங்கொட நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சாந்தனி தயாரத்ன உத்தரவிட்டார்.

அத்துடன் சந்தேக நபர் குடி போதையில் வந்து தனது மகளை எப்போதும் துன்புறுத்துவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று , மகளின் தலையை சுவற்றில் மோதியதால் தலையில் காயமுற்ற மகள் திவுலபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *