வவுனியாவில் கொரோனாத் தொற்றால் வயோதிபப்பெண் ஒருவர் உயிரிழந்ததாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 94 வயது வயோதிபப்பெண் ஒருவர் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பூந்தோட்டம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.






