காலி தெவத்த நகரில் இன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜவுளிக்கடை ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், அதனை ஒட்டியுள்ள பழைய சரக்குக் கடையும் சேதமடைந்துள்ளது.
காலி மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்துள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
பிற செய்திகள்