நாட்டில் கொரோனா தொற்று இன்றும் உச்சம்!

நேற்று 06 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட இரு ஆண்களும் பெண் ஒருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த மற்ற மூவரும் 60 வயதுக்கு மேற்பட்ட மூன்று பெண்கள்.

இதேவேளை, இன்று மேலும் 103 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 669136 ஆக அதிகரித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *